சமத்தும பொருளாதாரத் திட்டம் வாழ்க்கையின் ஏற்றத்திற்கு வித்திடும்

சமத்துவ பொருளாதாரத் திட்டத்தில் உதவித்தொகை பெற்றுக் கொண்ட பொது மக்களுடன் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஒன் வாய் மற்றும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் சிங்

ஆயர் ஈத்தாம் தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த பொது மக்களுக்கு சமத்துவ பொருளாதார திட்டத்தின் கீழ் பண உதவி வழங்கப்பட்டது. ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஒன் வாய் தலைமையில் மனோன்மணி பொன்னுசாமி (67), ரிங்கம்மா பழனியாண்டி(68), ரோசிமா மாய்ன்(41), ஜலிசா அசிம்(43) ஆகிய நால்வருக்கும் ரிம100 முதல் ரிம470 வரை மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படும் என செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார் வோங் ஒன் வாய்.
“சமத்துவ பொருளாதாரத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோர் குறிப்பாக மாதந்தோறும் ரிம790-க்கு குறைவாக பெறுநர்களுக்கு மாநில அரசு மாதந்தோறும் தொகையதிகரிப்புச் செய்யும்” என்றார்.
இந்நிகழ்வில் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் சிங் கலந்து கொண்டார்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);