சுற்றுப்புற தூய்மையை பேணுவீர்

Admin
தாமான் சாய் லெங் பார்க் வீடமைப்பு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
தாமான் சாய் லெங் பார்க் வீடமைப்பு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.

பினாங்கு மாநில அரசியல் தலைவர்கள், பொது இயக்கங்கள் தத்தம் ஆங்காங்கே துப்புரவுப் பணி மேற்கொள்ளுதல், கருத்தரங்கு நடத்துதல் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக இந்நிலை உருவாகியுள்ளது என தாமான் சாய் லெங் பார்க் வீடமைப்பு மற்றும் சந்தையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. மலேசியாவில் உள்ள பிற மாநிலங்களை காட்டிலும் பினாங்கு மாநிலத்தில் மட்டும் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் குறைந்துள்ளன என அண்மையில் சுகாதார அமைச்சு புள்ளி விபரங்கள் குறிப்பிடுகிறது. பினாங்கு மாநிலம் “டிங்கி அற்ற சமுதாயத்தை” (Komuniti Bebas Denggi ) உருவாக்க இலக்கு கொண்டுள்ளது
அண்மையில் தாமான் சாய் லெங் பார்க் சமூக மேம்பாடு மற்றும் முன்னேற்ற கழக ஏற்பாடு செய்திருந்த துப்புரவுப் பணி நிகழ்வினில் பேராசிரியர் கலந்து கொண்டார். அவ்வட்டாரத்தில் இரண்டு டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவ்வட்டாரத்தில் உள்ள வீடமைப்புப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பினாங்கு மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் குறைந்துள்ள வேளையில் இதனை முற்றாக ஒழிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். வழக்கத்திற்கு மாறான மாற்றங்களை உணர்ந்தால் அருகில் இருக்கும் மருத்துவமனைகளை நாடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
சுற்றுப்புற தூய்மையை பாதுகாக்க அவ்வப்போது துப்புரவுப் பணி மேற்கொள்வதன் மூலம் இப்பிரச்சனையை முற்றாக களைய முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே, சாய் லெங் பார்க் சந்தை வியாபாரிகளை அடிப்படை பொருட்களில் இருந்து கழிவுகளை தனிமைப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தினார். இதன்வழி, பினாங்கு மாநில கோட்பாடான பசுமை, தூய்மை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான பினாங்கு மாநிலத்தை எதிர்காலத்தில் உருவாக்க முடியும் என்பது வெள்ளிடைமலை.