பினாங்கு மாநில அளவிலான மறுசுழற்சி போட்டி 2017

மறுசுழற்சி போட்டியை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநகர் கழக நிர்வாக குழுத் தலைவர் ஹஜி முகமட் அக்பார் பின் முஸ்தாபா (உடன் மற்ற ஆதரவாளர்கள் )

பினாங்கு மாநில அளவிலான மறுசுழற்சி போட்டிக்கான விளக்கக் கூட்டம் கடந்த 28 பிப்ரவரி 2017-ஆம் நாள் கொம்தார் அரங்கில் இனிதே நடைபெற்றது. எட்டாவது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் போட்டி பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசின் ஆதரவோபினாங்கு மாநில அளவிலான மறுசுழற்சி போட்டிக்கான விளக்கக் கூட்டம் கடந்த 28 பிப்ரவரி 2017-ஆம் நாள் கொம்தார் அரங்கில் இனிதே நடைபெற்றது. எட்டாவது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் போட்டி பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசின் ஆதரவோடு பினாங்கு மாநகர் கழகம் ஏற்பாடுச் செய்துள்ளது. இவ்விளக்கக் கூட்டத்தில் பினாங்கு தீவுப் பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் பாலர்ப்பள்ளி மாணவர்கள் தத்தம் ஆசிரியர்களுடன் கலந்து சிறப்பித்தனர்.

பள்ளி மாணவர்கள் அணிகளாக ஒன்றிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தவே மறுசுழற்சி போட்டி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் வலுவான மரபுவழி அணுகுமுறை அடிப்படையில் கழிவு குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதை முதன்மை நோக்கமாக இத்திட்டம் கொண்டுள்ளது. அதோடு, இவ்வாண்டு ‘5R’ கோட்பாட்டின் அடிப்படையில் நடைபெறவுள்ளது.

கடந்தாண்டு இப்போட்டிக்கு சுமார் 90 பள்ளிக்கூடங்கள் கலந்து கொண்டு 127,193.71 கிலோ கிராம் மறுயனீடு பொருட்கள் சேகரிக்கப்பட்டதாக அறிவித்தார் ஏற்பாட்டு குழுத் தலைவர். இவ்வாண்டு இன்னும் அதிகமான விண்ணப்பங்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. இப்போட்டி மறுசுழற்சி, படைப்பாற்றல் மற்றும் புதுமை, தூய்மை, பசுமை, சமூக ஈடுபாடு, உணவு கழிவு பயன்பாடு, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் பயன்பாடு, எரிசக்தி / மின்சாரம் சேமிப்பு, தண்ணீர் சேமிப்பு, நெகிழி பைகளின் பயன்பாடு என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.. முதல் நிலை வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பணம் , பரிசு கோப்பை மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்படும். தொடர்ந்து ஆறுதல் பரிசு இடம் பெறும்.

இப்போட்டி இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரை நடைபெறும். இப்போட்டிக்கான விண்ணப்பப்பாரத்தை www.mbpp.gov.my என்ற அகப்பக்கத்தின் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். டு பினாங்கு மாநகர் கழகம் ஏற்பாடுச் செய்துள்ளது. இவ்விளக்கக் கூட்டத்தில் பினாங்கு தீவுப் பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் பாலர்ப்பள்ளி மாணவர்கள் தத்தம் ஆசிரியர்களுடன் கலந்து சிறப்பித்தனர்.

பள்ளி மாணவர்கள் அணிகளாக ஒன்றிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தவே மறுசுழற்சி போட்டி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் வலுவான மரபுவழி அணுகுமுறை அடிப்படையில் கழிவு குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதை முதன்மை நோக்கமாக இத்திட்டம் கொண்டுள்ளது. அதோடு, இவ்வாண்டு ‘5R’ கோட்பாட்டின் அடிப்படையில் நடைபெறவுள்ளது.

கடந்தாண்டு இப்போட்டிக்கு சுமார் 90 பள்ளிக்கூடங்கள் கலந்து கொண்டு 127,193.71 கிலோ கிராம் மறுயனீடு பொருட்கள் சேகரிக்கப்பட்டதாக அறிவித்தார் ஏற்பாட்டு குழுத் தலைவர். இவ்வாண்டு இன்னும் அதிகமான விண்ணப்பங்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. இப்போட்டி மறுசுழற்சி, படைப்பாற்றல் மற்றும் புதுமை, தூய்மை, பசுமை, சமூக ஈடுபாடு, உணவு கழிவு பயன்பாடு, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் பயன்பாடு, எரிசக்தி / மின்சாரம் சேமிப்பு, தண்ணீர் சேமிப்பு, நெகிழி பைகளின் பயன்பாடு என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.. முதல் நிலை வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பணம் , பரிசு கோப்பை மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்படும். தொடர்ந்து ஆறுதல் பரிசு இடம் பெறும்.

இப்போட்டி இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரை நடைபெறும். இப்போட்டிக்கான விண்ணப்பப்பாரத்தை www.mbpp.gov.my என்ற அகப்பக்கத்தின் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.