பிறை சந்தை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்படவுள்ளது – பேராசிரியர்

வேல்விஷ் கோன்செப் தனியார் நிறுவனம் 2011-ஆம் ஆண்டு ரிம800,000 மதிக்கத்தக்க பிறை சந்தை (மார்க்கெட்) பழைய உரிமையாளரிடம் வாங்கியது. மேம்பாட்டுத் திட்டத்திற்காக அவ்விடத்தில் வியாபாரம் செய்து வந்த மூவினத்தைச் சேர்ந்த வியாபாரிகளும் அவ்விடத்தைக் காலிச்செய்ய பரிந்துரைக்கப்பட்டனர். எனவே, இப்பிரச்சனையைக் களைய அந்த 23 வியாபாரிகளும் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களை நேரில் கண்டு முறையிட்டனர். மாநில துணை முதல்வரும் இப்பிரச்சனையைக் குறுகிய காலத்தில் தீர்த்து வைத்துப் பணமும், மாற்று இடம் பெற்று தருவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இழப்பீடு பெற்று கொண்ட வியாபாரிகளுடன் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர்,வழக்கறிஞர்கள் மற்றும் செபராங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர்கள்
இழப்பீடு பெற்று கொண்ட வியாபாரிகளுடன் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர்,வழக்கறிஞர்கள் மற்றும் செபராங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர்கள்

வேல்விஷ் கோன்செப் நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக வியாபாரிகள் இடத்தைக் காலி செய்யக்கோரி நடந்த பேச்சுவார்த்தை வழக்கு நீதிமன்றம் வரை சென்ற வேளையில், இரண்டாம் துணை முதல்வர் அவர்கள் பாமேலா விஜயராணி வழக்கறிஞர் நிறுவனத்தையும், சட்ட ஆலோசகர் ஷம்சீர் சிங்கையும் வியாபாரிகள் சார்பில் நியமித்து வியாபாரிகளுக்கு தகுந்த இழப்பீடு தரக்கோரி போராடியது இறுதியில் வெற்றியைத் தழுவியது. பிறை சந்தையில் வியாபாரம் செய்த 23 வியாபாரிகளுக்கும் 12 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை இழப்பீடு இரண்டு தவணையாக வழங்கப்பட்டன.

இரண்டாம் தவணைக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு பிறை சேவை மையத்தில் அண்மையில் இனிதே நடைபெற்றது. பிறை சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களின் பொற்கரத்தால் அனைவருக்கும் இரண்டாம் தவணைக்கான இழப்பீட்டு தொகைக்கான காசோலை எடுத்து வழங்கப்பட்டன. அதே வேளையில், மாநில அரசின் உதவியுடன் செபராங் பிறை நகராண்மைக் கழத்தின் முயற்சியில் தாமான் இண்ராவாசே சந்தை மறுசீரமைக்கப்பட்டு வருகின்ற நவம்பர் மாதம் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்ததும் அவ்விடத்தில் வியாபாரம் செய்ய விருப்பப்படும் அந்த 23 வியாபாரிகளுக்கும் இடம் ஒதுக்கீடு வழங்கப்படும் என பேராசிரியர் கூறியதும் வியாபாரிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். பிறை நகரம் மற்றும் அச்சந்தை பழமையானது என்பதாலும் குறிப்பிட்ட ஒரு பகுதியை பினாங்கு மாநில அரசாங்கம் புராதன பாரம்பரிய இடமாக அறிவிக்க ஏற்பாடுகள் செய்து வருவதை அவர் மேலும் குறிப்பிட்டார்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);