ஜார்ச்டவுன் – மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் ஏற்பாட்டில் அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளுடன், பேப் ஸ்மியர் பரிசோதனை, மார்பக பரிசோதனை, கண் பரிசோதனை, பிசியோதெரபி மற்றும் ஊட்டச்சத்து, மன ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு சுகாதார சேவைகளும் இந்த மருத்துவ முகாமில் வழங்கப்பட்டன.
இந்த சுகாதார முகாமில், முக்கியமாக பி40 குழுவிற்கு இலவச சுகாதார பரிசோதனைகளை நடத்தும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று இலவச சேவை வழங்கினர்.
அத்தினத்தன்று வருகையளித்தவர்களில், பெரும்பான்மையினருக்கு குறைந்தது ஒரு நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது .
வருகையளித்த ஒவ்வொரு 10 பேரில் நான்கு முதல் ஐந்து பேர் இருதய நோய், பக்கவாதம், புற்றுநோய், நீரிழிவு நோய், நுரையீரல் நோய் அல்லது உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் கண்டறியப்பட்டது.
“இது பெரும்பாலும் அவர்களின் சமூக பொருளாதார போராட்டங்களால் ஏற்படுகிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதில் மிகவும் மும்முரமாக இருப்பதால், தங்கள் உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்க முடியவில்லை.
“பலருக்கு தூக்கமின்மை, மோசமான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை மற்றும் நிதி அல்லது நேரக் கட்டுப்பாடுகள் காரணமாக வழக்கமான பரிசோதனைகளுக்குச் செல்வதில்லை” என்று Mitta For Life புற்றுநோய் ஆலோசனை மையத்தின் தலைவரான டாக்டர் எஸ். ஜெயஸ்ரீ கூறினார்.
முன்னதாக ஜாலான் கெபுன் பூங்கா, அசாட் தமிழ்ப்பள்ளியில் தர்ம சுகாதார முகாமின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டார்.
180 வருகையாளர்களை ஈர்க்கும் நோக்கில் நடத்தப்பட்ட நான்கு மணி நேர நிகழ்ச்சியில், முதல் ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
“பள்ளியின் மூத்த உதவியாளர் டி.ஜெயா, 62, மன அழுத்தத்தால் பக்கவாதம் ஏற்பட்டதாகவும் அந்நோயிலிருந்து மீண்டு வருவதாகவும் கூறினார். கோவிட்-19 காலத்தில், எங்களில் பலர் வீட்டிலேயே முடங்கிப் போயிருந்தோம், சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களுக்கு நான் ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டியிருந்தது.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலம் அதிகமாக இருந்ததால், நான் என் சொந்த நலனை புறக்கணித்தேன்.ஒரு நாள் காலையில், என் உடலின் இடது பக்கம் உணர்வின்மையை உணர்ந்தேன், மருத்துவ உதவியை நாடியப் பிறகு, எனக்கு பக்கவாதம் இருப்பது கண்டறியப்பட்டது.
“அதிர்ஷ்டவசமாக, அது மிதமாக நிலையில் இருந்தது. சுறுசுறுப்பாக இருக்க அடிக்கடி வெளியில் செல்வதன் மூலம் நான் ஒரு நேர்மறையான மனநிலையைப் பின்பற்றுகிறேன்,” என்று குணமடைந்து வரும் ஜெயா கூறினார்.
மலேசிய இந்துதர்ம மாமன்ற தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மலேசிய இந்து தர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையத் தலைவர் தனபாலன் நந்தகுமார், ஏற்பாட்டு ஆலோசகர் மற்றும் மாமன்றம் உறுப்பினரான டாக்டர் எஸ்.ஜெயஸ்ரீ மற்றும் ஏற்பாட்டு குழுத் தலைவர் டாக்டர் மாலதி நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சுகாதார முகாம், பல்வேறு இலவச பரிசோதனைகள் மற்றும் நல்வாழ்வு சேவைகள் மூலம் சுகாதாரம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையத் தலைவர் தனபாலன் தெரிவித்தார்.
சிறந்த ஆரோக்கியத்தை நோக்கிய நடவடிக்கைகளை எடுத்ததற்காக பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக, பங்கேற்பாளர்கள் ரிம10 இ-வாலட் கிரெடிட், பரிசுப்பை மற்றும் பற்றுச்சீட்டு உள்ளிட்ட பாராட்டுப் பரிசுகளையும் பெற்றனர்.
தர்ம சுகாதார முகாம் 2025, மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின், சுகாதார முன்முயற்சி திட்டம் மூலம் ஆரோக்கியமான, அதிக தகவலறிந்த சமூகத்தை வளர்ப்பதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
.