ஜார்ச்டவுன் – பினாங்கு அரசாங்கம், கூட்டரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு ஆதரவைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது.
மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் கூய் ஜி சென், உதவித் தொகை மற்றும் கூட்டாண்மைகள் மூலம் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு உதவுவதற்காக மாநிலம் அரசு நிதி ஒதுக்கியுள்ளது, என்றார்.
மாச்சாங் புபுபோக் சட்டமன்ற உறுப்பினர் லீ கை லூனின் துணைக் கேள்விக்குப் பதிலளித்தபோது, நோயாளிகள் பல உதவி ஆதாரங்களிலிருந்து பயனடைகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
“சுகாதார அமைச்சு (MoH), நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்கு ஒரு மாதத்தில் 14 அமர்வுகளுக்கு ஒரு முறைக்கு தலா ரிம100 மானியமாக வழங்குகிறது.
“கூடுதலாக, ரிம240.50 உதவித் தொகை மாதாந்திர ஹீமோடையாலிசிஸ் ஊசி மானியமும் கிடைக்கிறது,” என்று கூய் கூறினார்.
ஜகாட் மற்றும் பெர்கேசோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் டயாலிசிஸ் சிகிச்சையை ஆதரிக்கிறது என்பதை கூய் எடுத்துரைத்தார்.
“பெர்கேசோவின் கீழ் ஒரு புதிய டயாலிசிஸ் மையம் இந்த செப்டம்பரில் பினாங்கில் செயல்படத் தொடங்கும். இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 144 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் திறன் கொண்டது” என்று அவர் மேலும் கூறினார்.
டயாலிசிஸ் மைய விண்ணப்பங்கள் மற்றும் அதன் செயல்பாடுகளுக்கு மாநிலம் அரசு பொறுப்புடன் செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“புதிய மையங்களை அமைப்பதற்கு அதன் அமைப்பாளர்களுக்கு உதவும் நோக்கில் வாடகை தள்ளுபடிகள் மற்றும் பிற ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று கூய் கூறினார்.
இருப்பினும், நீண்டகால தீர்வுவாக இந்த நோயிலிருந்து பாதிக்கப்படுவதை தவிர்க்க சுகாதார கூறுகளில் கவனம் செலுத்த வேண்டுவே தவிர மேலும் டயாலிசிஸ் இயந்திரங்கள் அல்லது மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே இதற்கானத் தீர்வு அல்ல என்றும் குறிப்பிட்டார்.
“நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார். நோய் தடுப்பு மற்றும் சுகாதார பரிசோதனையை நோக்கமாகக் கொண்ட “3S” திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சு உடனான மாநிலத்தின் கூட்டாண்மையைக் குறிப்பிடுகிறார்.
3S என்பது (சர்க்கரை, உப்பு/சோடியம் மற்றும் புகைப்பிடித்தல்) இருந்து சுகாதார வாழ்க்கை முறையை பின்பற்றுவது ஆகும்.
இந்த அமர்வின் போது, பாலிக் புலாவில் உள்ள CAT டயாலிசிஸ் மையத்திற்கான மாநிலத்தின் வருடாந்திர ஒதுக்கீடு குறித்தும் லீ கேள்வி எழுப்பினார். அது “பல்லாயிரக்கணக்கான” ரிங்கிட் மட்டுமே என்று குறிப்பிட்டார்.
அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் டயாலிசிஸ் மையங்களுக்கான செயல்பாட்டு செலவுகள் மற்றும் ஆதரவு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த கூய், மாநில அரசு மானியங்களை வழங்கும் அதே வேளையில், ஊழியர்களின் சம்பளம் போன்ற செயல்பாட்டுச் செலவுகளை பாலிக் புலாவில் உள்ள CAT டயாலிசிஸ் மையத்தில் பி பிராவுன் ஈடுகட்டுகிறது என்று தெளிவுபடுத்தினார்.
இந்த மையம் பினாங்கு மாநகர் கழகத்தின் (MBPP) இடத்தில் செயல்படுகிறது, குறைந்த விலையில் வாடகைக்கு வழங்கப்படுகிறது.
“நோயாளிகளுக்கு, அனைத்து உதவித் தொகைக்கு பிறகு சிகிச்சைக்கானக் கட்டணம் ரிம10 மட்டுமே விதிக்கப்படுகிறது,” என்று கூய் கூறினார், இதில் மாநில மற்றும் மத்திய அரசுகளின் உதவித் தொகையும் இடம்பெறுகிறது.
டயாலிசிஸ் மையங்களின் விரிவாக்கம் குறித்து, CKAPS (தனியார் மருத்துவப் பயிற்சி கட்டுப்பாட்டுப் பிரிவு) இன் கீழ் உள்ள கூட்டரசு வழிகாட்டின் கீழ், சீரான விநியோகத்தை உறுதி செய்வதற்காக ஒரு பகுதியில் குறிப்பிட்ட மையங்களின் எண்ணிக்கையில் தான் அதன் மையங்களும் விநியோகமும் இடம்பெற முடியும் என்று கூய் விளக்கமளித்தார்.
“அனைத்து மாவட்டங்களிலும் சமச்சீரான எண்ணிக்கையிலான டயாலிசிஸ் மையங்களை பராமரிப்பதே எங்கள் நோக்கமாகும்.
“புதிய மையங்கள் திறக்கப்படுவது, அதனை தொடங்க விரும்பும் ஆர்வமுள்ள தரப்பினரைப் பொறுத்தது” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், 2020 முதல் 2024 வரை, பினாங்கு அரசாங்கம் பொதுமக்களுக்கான அதன் முயற்சிகளை ஆதரிப்பதற்காக CAT டயாலிசிஸ் மையத்திற்கு ரிம147,120 ஒதுக்கியுள்ளதாக கூய் முன்னதாக சட்டமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.