வைசாக்கி திறந்த இல்ல உபசரிப்பு 2016

Admin
அமரர் திரு கர்பால் சிங் அவர்களின் வாழ்க்கை வரலாறு  கண்காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டனர் புக்கிட் குளுகோர்  நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால், அமரர் கர்பால் சிங் துணைவியார், ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ. (இடமிருந்து வலம்) .
அமரர் திரு கர்பால் சிங் அவர்களின் வாழ்க்கை வரலாறு கண்காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டனர் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால், அமரர் கர்பால் சிங் துணைவியார், ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ. (இடமிருந்து வலம்) .

பினாங்கு மாநிலத்தில் வைசாக்கி திறந்த இல்ல உபசரிப்பு 14-வது முறையாக மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வைசாக்கி என்பது சீக்கியர்களின் புத்தாண்டைக் குறிப்பதாகும். இந்நாளை சீக்கியர்கள் குடும்பத்தாருடனும் சுற்றத்தாருடனும் மிக விமரிசையாகக் கொண்டாடுவர்.
பினாங்கு மாநிலத்தில் வைசாக்கி திறந்த இல்ல உபசரிப்பு கடந்த 23/4/2016-ஆம் நாள் பினாங்கு சரித்திரப் புகழ்ப்பெற்ற தளமான ஃபொர்ட் கொன்வாலிஸ் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்குச் சிறப்பு பிரமுகராக டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான திரு.ஜெக்டிப் சிங் டியோ, புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்மால் மற்றும் காலஞ்சென்ற திரு கர்பால் சிங் அவர்களின் துணைவியார் குர்மிட் கோர் ஆகியோர் வருகையளித்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அம்சமாக சீக்கியர்களின் பாரம்பரியச் சித்தரிக்கும் வகையில் ஆடை நெய்தல், உரமோர் தயாரித்தல், பாரம்பரிய இயந்திரம் கொண்டு மாவு அரைத்தல் ஆகியவை கண்காட்சிக்கும் வருகையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஜெலுந்தோங் புலி என்றழைக்கப்படும் அமரர் திரு கர்பால் சிங் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தம் வகையில் பொது மக்களுக்கும் மனித உரிமைக்கும் குரல் கொடுத்து சிங்கமாக வலம் வந்த திரு கர்பால் சிங் அன்னாரின் சிறப்பு படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

சீக்கியர் பாரம்பரிய நடனம்
சீக்கியர் பாரம்பரிய நடனம்

இந்நிகழ்வில் சீக்கியர்களின் வண்ணமயமான பாரம்பரிய நடனங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் சீக்கியர்களின் பாராம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. வைசாக்கி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட ஆட்சிக்குழு உறுப்பினர் அனைத்து சீக்கியர்களுக்கும் வைசாக்கி புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பினாங்கு மாநிலம் பல இனத்தவர்களின் பண்பாடு மற்றும் கலாச்சார விழாக்கள் கொண்டாடுவதோடு பினாங்கு வாழ் மக்களிடையே ஒற்றுமை வலுப்படுகிறது என வரவேற்புரையில் தெரிவித்தார். பினாங்கு மாநிலத்தில் சிறுபான்மையினராகச் சீக்கியர்கள் வலம் வந்தாலும் 14-வது முறையாக தொடர்ந்து நடத்தும் ஏற்பாட்டுக் குழுவினருக்குப் பாராட்டுகள் தெரிவித்ததோடு இனிவரும் காலங்களிலும் ஃபொர்ட் கொன்வாலிஸ் இடத்திலேயே நடத்துமாறு ஏற்பாட்டுக் குழுவினரை கேட்டுக்கொண்டார்.