ஷான் கருணை இல்ல குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்

ஷான் கருணை இல்ல குழந்தைகளுடன் கொடிமலை நாடாளுமன்ற உறுப்பினர் சய்ரில் கீர் ஜொஹாரி.

ரோஸ் அரக்கட்டளை, கொடிமலை நாடாளுமன்ற உறுப்பினர் சய்ரில் கீர் ஜொஹாரி இணைந்து ஷான் கருணை இல்ல குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடினர்.
ஷான் கருணை இல்லத்தில் வாழும் 50 குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார் நாடாளுமன்ற உறுப்பினர் சய்ரில். தஞ்சோங் தோகோங் மாவுன் எர்சாய்ன் பகுதியில் அமைந்துள்ள ஷான் இல்லத்திற்கு நேரடியாக சென்று இந்த நற்செயலை புரிந்தார். பண்டிகை காலங்களில் இக்குழந்தைகள் புறக்கணிக்கப்படுவதில் இருந்து விடுவிக்க இப்புனித காரியத்தை தாம் செய்யவதாக சித்தரித்தார்.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் அக்குழந்தைகளுக்கு அன்றாட தேவைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க ஷான் இல்ல நிர்வாகத்திடம் ரிம1000-க்கான காசோலையை வழங்கினார் . அதோடு, ஆதரவற்ற குழந்தைகள் கல்வி கேள்விகளில் மேலும் சிறந்து விளங்க ரிம3,922.00 மதிக்கத்தக்க இரண்டு கணினிகளை அன்பளிப்பாக வழங்கி சிறப்பித்தார்.} else {