15வது எழுச்சி உலகளாவிய உச்ச மாநாட்டில் 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பர்

Admin
whatsapp image 2025 06 11 at 17.57.18 (1)

 

ஜார்ச்டவுன் – வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் 17 வரை பட்டர்வொர்த் அரங்கில் நடைபெறவிருக்கும் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்களின் எழுச்சி உலகளாவிய உச்ச மாநாட்டின் 15வது பதிப்பில் 30 நாடுகளைச் சேர்ந்த 600க்கும்k no மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

whatsapp image 2025 06 11 at 17.57.18

பினாங்கு அரசாங்கத்துடன் இணைந்து மலேசியாவின் புறநகர் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் (DHRRA) ஏற்பாடு செய்துள்ள இந்த உச்ச மாநாடு,
மூன்றாவது முறையாக மலேசியாவில்
நடைபெறுகிறது. அதேவேளையில், முதல் முறையாக பினாங்கில் நடைபெறுவது வரவேற்கத்தக்கது.

உச்ச மாநாட்டின் தலைவருமான டத்தோ சரவணன் சின்னப்பன், உலகளாவிய தமிழ் வணிகம் மற்றும் தொழில்முறை வலைப்பின்னல்களை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முதன்மை நோக்கமாக இடம்பெறுகிறது, என்றார்.

“பினாங்கு மாநிலத்தில் முதல் முறையாக ‘Rise Global Summit’ எனும் மாநாடு நடத்தப்படுகிறது. மேலும், அமெரிக்கா, இந்தியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார், யுனைடெட் கிங்டம், இந்தோனேசியா மற்றும் பல நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளின் பங்கேற்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

“இந்த உச்ச மாநாட்டின் முக்கிய நோக்கம், தமிழ் தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்களின் உலகளாவிய வலையமைப்பை வலுப்படுத்துவதாகும், குறிப்பாக மலேசியாவில் தொழில்முனைவர்களுடன் வணிகத் தொடர்புகளை வளர்த்து அதனை அனைத்துலக வணிகத்திற்கு கொண்டு சேர்க்க இது வழிவகுக்கும்,” என்று சரவணன் ஜார்ச்டவுனில் உள்ள பேவியூ தங்கும்விடுதியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிகுழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு கலந்து கொண்டார். இந்த ஆண்டு உச்ச மாநாட்டிற்கான ‘வா தமிழா’ எனும் கருப்பொருளான வலியுறுத்தினார்.

whatsapp image 2025 06 11 at 17.57.19 (1)
ஆட்சிகுழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு

“இந்த ஆண்டு மாநாட்டில் வணிக வாய்ப்புகள், மனித மூலதன மேம்பாடு & வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்நுட்ப பகிர்வு மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், முதலீட்டு வாய்ப்புகள், சுற்றுலா மற்றும் வணிகத் துறைகள் போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.

இந்த அமர்வுகள் தமிழில் நடத்தப்படும் என்றும், விவசாயம், உற்பத்தி, கட்டுமானம், சில்லறை விற்பனை, சுகாதாரம், கல்வி, ரியல் எஸ்டேட், போக்குவரத்து மற்றும் ஊடகம் உள்ளிட்ட 15 முக்கிய துறைகளை முன்னிலைப்படுத்தும் என்றும் சுந்தராஜூ மேலும் கூறினார்.

வணிக சமூகம், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், பொது மற்றும் தனியார் துறை பங்குதாரர்கள் இருவரையும் இந்த உச்ச மாநாட்டில் பதிவு செய்து பங்கேற்குமாறு அவர் திறந்த அழைப்பு விடுத்தார்.

 

“பங்கேற்க விரும்பும் மலேசியர்கள் https://tamilrise.org/summit/ வழியாக பதிவு செய்யலாம். மலேசியர்களுக்கு இந்த மூன்று நாள் அமர்வுகளுக்கு ரிம1,000 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த தளம் இந்தியச் சமூகத்திற்கும் மலேசியாவிற்கும் மிகவும் சிறந்த மற்றும் முற்போக்கான எதிர்காலத்தை உருவாக்குவதற்குப் பங்களிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.