பினாங்கு மாநிலத்தில் உள்ள சிறுதொழில் செய்யும் வியாபாரிகளுக்குப் பொருளாதார அடிப்படையில் உதவும் பொருட்டு மாநில அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கி ‘PTSR- Projek Titian Saksama Rakyat’ என்றழைக்கப்படும் திட்டத்தின் கீழ்க் வியாபாரக் கடனுதவியை வழங்கி வருகிறது. பினாங்கு மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து மாநில அரசு பினாங்கின் சிறு தொழில் வியாபாரிகளுக்கு சுமையின்றி எளிமையான முறையில் கூடுதல் மூலதனத்தை இந்தச் சிற்றளவு கடனுதவித் திட்டத்தின் வழி ஏற்படுத்தித்...