பினாங்கு மாநில அரசு உயர்க்கல்வி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது.

ஊக்கத்தொகை பெற்றுக்கொண்ட மாணவர்களுடன் பினாங்கு மாநில அரசியல் தலைவர்கள்.
ஊக்கத்தொகை பெற்றுக்கொண்ட மாணவர்களுடன் பினாங்கு மாநில அரசியல் தலைவர்கள்.

பினாங்கு மாநில அரசு இனம், மதம் மற்றும் அரசியல் பின்னனி பார்க்காமல் பினாங்குவாழ் மாணவர்களுக்குத் தொடர்ந்து எட்டாவது முறையாக உயர்க்கல்வி ஊக்கத்தொகை வழங்கியது. மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் உயர்க்கல்வி நிலையங்களில் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்த மாணவர்களுக்குத் தமது மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்தோடு எதிர்கால பினாங்கு மாநில முன்னேற்றத்திற்கு இவர்களே ஊன்றுகோளாகத் திகழ்வர் என்றார்.
பினாங்கு மாநில அரசு கடந்த 2008 முதல் 2014 வரை கூடுதல் வருமானமாக ரிம507 லட்சம் பெற்றுள்ளதால் தொடர்ந்து உயர்க்கல்வி மையங்களில் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற பினாங்கு வாழ் மாணவர்களுக்கு ரிம1,000 ஊக்கத்தொகையாக வழங்கியது. மாநில அரசு கடந்த 5 ஆண்டுகளிலே ரிம453 லட்சம் கூடுதல் வருமானம் கிடைக்கப்பெற்ற வேளையில் கடந்த 50 ஆண்டுகளில் தேசிய முன்னணி ஆட்சியில் ரிம373 லட்சம் மட்டுமே பெறப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
இலஞ்ச ஊழல் அற்ற தூய்மையான அரசு நிர்வாகமே, தொடர்ந்து பினாங்கு மக்களுக்குத் தங்கத் திட்டம் மட்டுமின்றி ஊக்கத்தொகை வழங்குவதற்கு அடிப்படையாக விளங்குகிறது.எட்டாவது ஆண்டாக வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகை மலேசியாவில் அமைந்துள்ள அனைத்து அரசு உயர்கல்வி மையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் உயர்க்கல்வி மையங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்றார் மாநில முதல்வர்.

ஊக்கத்தொகை பெற்று கொண்ட மாணவர்கள்
ஊக்கத்தொகை பெற்று கொண்ட மாணவர்கள்

பினாங்கு மாநில பெருநிலத்தில் அமைந்துள்ள 2 மாவட்டங்களான வட செபராங் பிறையை சேர்ந்த 538 மாணவர்கள் மற்றும் தென் செபராங் பிறை 233 மாணவர்களுக்கு உயர்க்கல்வி நுழைவுக்கட்டணம் செலுத்துவதற்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. வட செபராங் பிறை மாவட்டத்திற்கு ரிம 538,000 மற்றும் தென் செபராங் பிறை மாவட்டத்திற்கு ரிம 233,000 என மொத்தமாக ரிம771,000 மானியத்தை மாநில அரசு 2015/2016 தவணைக்கான உயர்க்கல்வி மாணவர்களுக்கு ஒதுக்கியுள்ளது பாராட்டக்குறியதாகும். அதேவேளையில், தீவுப்பகுதியில் வடகிழக்கு மாவட்டத்தில் 538 மாணவர்களும் தென்மேற்கு மாவட்டத்தில் 233 மாணவர்களும் ஊக்கத்தொகை பெற்றுக்கொணடனர். இவ்விரு மாவட்டங்களிலும் ரிம1309 000 ஒதுக்கியுள்ளது..