மாநகர் கழகத் தலைவர் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்

பினாங்கு மாநகர் கழக தலைவர் மேயர் டத்தோ மைமுனா முகமது சாரிப் உடன் அக்கழக உறுப்பினர்

பினாங்கு மாநகர் கழகத் தலைவர் டத்தோ மைமுனா முகமது சாரிப் ஐக்கிய நாடுகள் சங்கத்தின் (.நா) மக்கள் குடியிருப்பு திட்ட நிர்வாக இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். .நாவின் பொதுச் செயலாளரான அந்தோனியா குத்தரேஸ் மைமுனாவின் பெயரை முன்மொழிந்ததைத் தொடர்ந்து ஐ.நாவின் பிரதானக் குழுத் தலைவர்களும் ஒருமனதாக ஒப்புதல் வழங்கி கடந்த டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

ஆசியாவைச் சார்ந்த ஒருவர் இந்தப் பதவியை வகிப்பது இதுவே முதல் முறையாகும். “இந்த நியமனத்தின் வழி மைமுனா வரலாறு படைத்துள்ளார். பினாங்கு மாநிலத்தின் அரசு ஊழியர் இந்த உயர்மிக்க பதவியில் பொறுப்பேற்பது பெருமை சேர்ப்பதை தொடர்ந்து மலேசிய சாதனை புத்தகத்தில் இவர் இடம்பெற்றுள்ளார். இவரின் இச்சாதனை அனைத்து மகளிருக்கும் பெருமை அளிக்கிறது என்றால் மிகையாகாது.

மலேசிய சாதனை புத்தகத்தின் இந்த அங்கீகாரம் மலேசியா வாழ் அனைத்து பெண்களுக்கும் புத்துணர்ச்சி வழங்கி அவர்களும் சிறந்து விளங்க ஒரு மையக்கல்லாக அமையும் என மலேசிய சாதனை புத்தக பொது துணை நிர்வாகி முகமது எலேக்ஸ் எட்வட். நம்பிக்கை தெரிவித்தார்.

“2018 முதல் 2021வரை நான்கு ஆண்டுகளுக்கு நய்ரோபி,கென்யா நாட்டில் பணிநிமித்தம் செய்யப்படுகிறேன். மேலும், .நா குடியேற்ற நிர்வாக இயக்குனராக புதிய சவாலை எடுத்துக் கொள்ளும் நாள் வரை நகராண்மைக் கழகத் தலைவராக தனது கடமைகளை நிறைவேற்றுவேன் என டத்தோ மைமுனா தெரிவித்தார்.

மேலும், பினாங்கு மாநிலத்தை அனைத்துலக தரத்தில் அறிமுகப்படுத்தவும் மேம்மையடைவும் ஆலோசனைகளை அங்கிருந்து தாம் அளிக்கவிருப்பதாக பாடாங் கோத்தாவில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தின் பின்னர் இவ்வாறு குறிப்பிட்டார். டத்தோ மைமுனா எதிர்காலத்தில் மனித வாழ்விடம், சுற்றுச்சூழல்,மக்கள் தொகைக்கான வாழ்க்கை மேம்பாடு மீதான உலகளாவிய வியூகத்தை உருவாக்க இயலும் என நம்பப்படுகிறது.