வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டி 2018

Admin
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்குக்கிடையிலான பதினோரு வயதிற்குட்பட்ட ஐந்தாவது வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டி  அறிமுக விழாவை பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி தொடக்கி வைத்தார். இவ்விளையாட்டுப்  போட்டி வருகின்ற 6 அக்டோபர் 2018-ஆம் நாளன்று செபராங் ஜெயா சோனி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டி அறிமுக விழாவில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி கலந்து கொண்டார். (உடன் ஏற்பாட்டு குழுவினர்)
வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டி பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், பினாங்கு மாநில காற்பந்து சங்கம், பினாங்கு இந்து சங்கம் மற்றும் மலேசிய தமிழர் குரல் சங்கத்தின் ஒத்துழைப்பில் நடைபெறவுள்ளதை தமதுறையில் குறிப்பிட்டார் சட்டமன்ற உறுப்பினருமான சத்தீஸ்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே விளையாட்டு போட்டியில் ஆர்வத்தையும் திறமையையும் வெளிகொணர இப்போட்டி சிறந்த தளமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்ப்பள்ளி மாணவர்களை அனைத்துலக தரத்தில் சிறந்த போட்டியாளர்களாக உருவாக்க இம்மாதிரியான போட்டிகள் மையகல்லாக அமையும் என்பது பாராட்டக்குரியதாகும்.
இம்முறை பெண்களுக்கான பிரிவுக்கு ” பினாங்கு இந்து சங்க சுழற்கிண்ணம்” என பெயரிடப்பட்டுள்ளது.