வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆரம்பமானது

பினாங்கு மாநகர் கழகத்தின் முயற்சியில் ஜாலான் ஹட்டோன் மற்றும் ஜாலான் திரான்ஸ்வர் சாலைகளில் வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

ஜாலான் ஹட்டோன் மற்றும் ஜாலான் திரான்ஸ்வர்வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பை மேம்பாட்டுத் திட்டத்தின் மாதிரி வரைப்படம்
ஜாலான் ஹட்டோன் மற்றும் ஜாலான் திரான்ஸ்வர்வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பை மேம்பாட்டுத் திட்டத்தின் மாதிரி வரைப்படம்

நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் இம்மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரிம5.86 கோடி ஒதுக்கியுள்ளதைக் குறிப்பிட்டார். வெள்ள நிவாரணம் மற்றும் வடிகால் அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காகத் திறந்த குத்தகை முறையில் ரெஸ்டார் பொறியியல் நிறுவனம் (Resdar Engineering Sdn. Bhd) தேர்ந்தெடுக்கப்பட்ட்டது. இத்திட்டம் வருகின்ற மே 2016-ஆம் ஆண்டு நிறைவடையும் என நம்பப்படுகிறது. இத்திட்டத்தில் 4.8 மீட்டர் அளவு வரை பெரிய சாக்கடைகள் நிறுவுதல்,
சாலைகள் பராமரிப்பு, புதிய பாதசாரி நடைப்பாதைகள் நிர்மாணிப்பு ஆகியவை இடம்பெறும் என செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர்.

2015-ஆம் ஆண்டு பினாங்கு மாநில தீவு மற்றும் செபராங் பிறை முழுவதும் வெள்ள நிவாரணப் பிரச்சனைக்குத் தீர்வுக்காணும் வகையில் ரிம48 கோடி மாநில அரசு ஒதுக்கியுள்ளது பாராட்டக்குறியதாகும். இத்திட்டங்களின் மூலம் வெள்ள நிவாரண பிரச்சனைக்குத் தீர்வுக்காண முடியும் என நம்பிக்கை தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

2014-ஆம் ஆண்டு பினாங்கு மாநகர் கழகம்
ரிம3,230 295.95 நிதி ஒதுக்கீட்டின் வழி பீகேட் நெடுஞ்சாலை, ஜாலான் லோகான், ஜாலான் கன்தொன்மேன்ட், ஜாலான் ரெசிடிசி, ஜாலான் மேக்கலிஸ்தர், மற்றும் ஜாலான் காட் லேபோ பாசார் ஆகிய சாலைகளின் வடிகாலமைப்பை மேம்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இந்நிகழ்வில் பினாங்கு மாநகர் கழகத் தலைமை அதிகாரி டத்தோ மைமுனா ஷாரிப், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);