கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் திகதி முதல் பத்து லஞ்சாங் இந்து மயானத்தைப் பராமரிக்கும் முழு பொறுப்பினை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஏற்றுக்கொண்டது. கடந்த காலங்களில் இந்த மயானத்தின் பராமரிக்கும் பொறுப்புகளை ஏற்ற சில தரப்பினர்களின் அலட்சியப் போக்கினால் மின்சுடலை முறையாகப் பாதுகாக்கப்படாமல் பழுதடைந்திருப்பது அனைவரும் அறிந்ததே. பத்து லஞ்சாங் இந்து மயானம் இரண்டு கட்டமாக மறுசீரமைப்புச் செய்யப்படவுள்ளது என இந்து அறப்பணி வாரியத் தலைவரும் மாநில...