தீபாவளி தற்காலிக வர்த்தக அனுமதிக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர், 5 முதல் சமர்ப்பிக்கலாம்

img 20250904 wa0113

ஜார்ச்டவுன் – வருகின்ற அக்டோபர் மாதம் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதை முன்னிட்டு, தற்காலிக பருவகால வர்த்தக அனுமதிகளுக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர்,5 முதல் திறக்கப்படும் என்று பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) அறிவித்துள்ளது.

729f6673 e966 4e12 9403 7b434a10b6e7

அனைத்து விண்ணப்பங்களையும் எம்.பி.பி.பி இன் ulesen.mbpp.gov.my என்ற ஆன்லைன் உரிம போர்டல் மூலம் அக்டோபர்,19 வரை
சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறது.

எந்தவொரு அமலாக்க சிக்கல்களையும் தவிர்க்க, வணிகர்கள் அனைத்து வழிகாட்டுதல்களையும் காலக்கெடுவையும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு எம்.பி.பி.பி கவுன்சிலர் டான் சூ சியாங் கேட்டுக் கொண்டார்.
c435dce1 d4e7 4178 880e b24fede946c0 MICCI பினாங்கு கிளை உறுப்பினர் எம். கதிரேசன்

விண்ணப்பதாரர்கள் சில ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். இதன் மூலம் செயல்முறை சீராக அமையும்.

“இதில் மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கம் (MICCI), பினாங்கு கிளையின் ஒப்புதல் கடிதம், முன்மொழியப்பட்ட கடை அல்லது இடத்தைக் காட்டும் தெளிவான வரையப்பட்ட தளவமைப்புத் திட்டம் மற்றும் வாகன நிறுத்துமிடத்திற்கான கோரிக்கை ஆகியவை அடங்கும். இது பிரதான விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்,” என்று யூனியன் தெருவில் உள்ள எம்.பி.பி.பி இன் உரிமத் துறையின் தற்காலிக வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது டான் கூறினார்.

வணிகர்கள் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்து கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
எம்.பி.பி.பி கோடிட்டுக் காட்டியுள்ளது என்று அவர் கூறினார்.

“உதவியாளர்கள் உட்பட அனைத்து உணவு கையாளுபவர்களும் செல்லுபடியாகும் டைபாய்டு தடுப்பூசிகளை எடுப்பது அவசியமாகும். எல்லா நேரங்களிலும் சுத்தமான ஏப்ரன்கள் மற்றும் தலைக்கவசங்களை அணிய வேண்டும். வர்த்தகர்கள் தங்களின் கைகளால் நேரடியாக உணவைக் கையாளுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், உணவுக் கழிவுகள் பொருத்தமான அளவிலான மூடப்பட்ட தொட்டிகளில் முறையாக அகற்றப்படுவதை உறுதி செய்வதற்கு அவர்களே பொறுப்பாவார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த முன்முயற்சி திட்டத்தின் கீழ் தற்காலிக வர்த்தக அனுமதிகள் லிட்டில் இந்தியா பகுதிக்குள் உள்ள செயல்பாடுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று அறியப்படுகிறது.

மலேசிய குடிமக்கள் மட்டுமே இந்த அனுமதியின் கீழ் விண்ணப்பிக்கவும் வணிகங்களை நடத்தவும் தகுதியுடையவர்கள் என்றும், வெளிநாட்டவர்கள் கண்டிப்பாக தடைசெய்யப்படுவர் என்றும் டான் வலியுறுத்தினார்.

“பினாங்கின் பசுமை முன்முயற்சிகளை ஆதரிக்க வணிகர்களை எம்.பி.பி.பி ஊக்குவிக்கிறது. இது நிலையான நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் சாத்தியமாகும். இதில் பணமில்லா பரிவர்த்தனைகளை வழங்குதல், வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த கொள்கலன்கள் மற்றும் பைகளை கொண்டு வர ஊக்குவித்தல் மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல் ஆகியவை அடங்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

முந்தைய ஆண்டுகளில் காணப்பட்ட பொதுவான தவறுகளைத் தவிர்க்கவும், அதாவது தாமதமாக சமர்ப்பித்தல், MICCI அல்லது எம்.பி.பி.பி இன் முன் ஒப்புதல் இல்லாமல் அங்கீகரிக்கப்பட்ட இடங்களை மற்ற வர்த்தகர்களுக்கு வழங்குதல் மற்றும் நியமிக்கப்பட்ட இடங்களுக்கான வாகன நிறுத்துமிட கட்டணங்களை உடனடியாக செலுத்தத் தவறியது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்களுக்கு அவர் மேலும் நினைவூட்டினார்.

இதற்கிடையில், MICCI பினாங்கு கிளை உறுப்பினர் எம். கதிரேசன் (கார்த்திக்), வாகன நிறுத்துமிடக் கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்தத் தவறும் வர்த்தகர்களின் விண்ணப்பங்களை அடுத்த ஆண்டு நிராகரிப்பது உட்பட கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.