இந்து சங்க புக்கிட் பெண்டேரா பேரவையின் வருடாந்திர பாராட்டு விழா 2018

Admin

மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா பேரவை ஏற்பாட்டில் “வருடாந்திர பாராட்டு விழா” கடந்த 30/8/2018-ஆம் நாள் பெர்ஜாயா தங்கும் விடுதியில் இனிதே நடைபெற்றது. முதல் முறையாக நடைபெற்ற இந்நிகழ்வினை புலாவ் திக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர் லீ சுன் கிட் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மலேசிய இந்து சங்க தேசிய துணைத்தலைவர் தேவார நாயகன் சண்முகம், இந்து அறப்பணி வாரிய ஆணையரும் மாநகர் கழக உறுப்பினருமான காளியப்பன், மாநில பேரவையின் தலைவர் முனியாண்டி மற்றும் இந்து சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் பாராட்டு விழாவில் திரு பிரேம் குமார் அவர்களுக்கு உயரிய விருதான ‘கொடி மலை விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், இந்து சங்க வளர்ச்சிக்கும் அதன் மேன்மைக்கும் அயராது பங்காற்றிய திரு சண்முகவேலு, தொண்டர்மணி காத்தம்மா, தொண்டர்மணி அம்பிகாபதி, திருமதி லட்சுமி ஆகியோருக்கும் சிறந்த சேவையாளர் விருது வழங்கப்பட்டன.

மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா பேரவையின் கீழ் பல சமூக நிகழ்வுகள் மற்றும் இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற ஊந்துகோளாக விளங்கிய தொண்டர்களைக் கெளரவிக்கும் சிறந்த நிகழ்வாக இப்பாராட்டு விழா இடம்பெறுகிறது என இப்பேரவையின் தலைவர் திரு தர்மன் அகம் மகிழத் தெரிவித்தார்.