பெண்களுக்கு தொழில் திறன் வளர்க்க புதிய பயிற்சி திட்டம்

img 20260309 wa0107

பிறை – அண்மையில், பிறை கிராம சமூக மேலாண்மை கழக (எம்.பி.கே.கே) பொருளாதாரம் மற்றும் தொழில்முனைவோர் பிரிவின் முன்முயற்சி திட்டத்தின் கீழ், ‘புருவத் த்ரெடிங்’ (Eyebrow Threading) தொடர்பான ஒருநாள் திறன் பயிற்சி பட்டறை வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த திறன் மேம்பாட்டுப் பட்டறையில் பிறை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 20 பெண்கள் கலந்து கொண்டு, தங்கள் தொழில்முறை திறன்களை மேம்படுத்தினார்கள். இதில், புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிகாட்டலும் வழங்கப்பட்டது.
img 20260309 wa0105

“இந்த முயற்சி பெண்களின் பொருளாதார அதிகாரத்தை வலுப்படுத்துவதோடு, சமூகத்திற்குள் சிறு வணிக மேம்பாட்டை ஊக்குவிக்கும் முக்கியத்துவம் கொண்டது. இத்தகைய திறன் மேம்பாட்டு முயற்சிகள், பெண்களின் சுயாதீனமும் சமூக-பொருளாதார முன்னேற்றத்திலும் நேரடியாக பங்களிக்கின்றன,” என்று எம்.பி.கே.கே பிறை தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை செபராங் பிறை மாநகர் கழக கவுன்சிலர் பொன்னுதுரை மற்றும் எம்.பி.கே.கே பிறை தலைவர் ஸ்ரீ சங்கர் ஆகியோர் இணைந்து அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தனர்.
img 20260309 wa0106

பட்டறையை ஸ்ரீநேஷ் அழகு நிலைய உரிமையாளர் திருமதி ஷமலா நடத்தி, பங்கேற்பாளர்களுக்கு நடைமுறை அறிவு மற்றும் தொழில்முறை நுட்பங்களை பகிர்ந்து, முழுமையான வழிகாட்டுதலையும் வழங்கினார்.

திறன் பயிற்சியைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்களுக்கு மலேசிய நிறுவன ஆணையம் (SSM) பதிவு செய்யும் வழிகாட்டல், உள்ளூர் அரசாங்க உரிம விண்ணப்பம் சம்பந்தப்பட்ட வழிகாட்டல் மற்றும் கூடுதல் ஆதரவுக்காக SPUMI நிறுவன பரிந்துரை போன்ற சேவைகளும் வழங்கப்பட்டன.
img 20260309 wa0108
இந்த நிகழ்ச்சி, பெண்களின் திறன்களை மேம்படுத்துவதோடு, சமூகத்தில் சுயாதீனம் மற்றும் தொழில்முறை முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.