மாநில அரசு இந்தியச் சமூகத்தின் நலனைப் பேணி காக்கும்

Admin

 

ஜார்ச்டவுன் – பினாங்கு2030 இலக்குக்கு ஏற்ப தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்கும் கொள்கைக்கு இணங்க இம்மாநிலத்தின் இந்தியச் சமூகம் உட்பட எந்த இனத்தையும் ஒதுக்கப்படாமல் மக்களின் நலனில் தொடர்ந்து அக்கறை காட்ட பினாங்கு மாநில அரசு எப்போதும் உறுதிபூண்டுள்ளது.

இந்த மாநிலத்தில் உள்ள இந்தியச் சமூகத்தைத் தொடர்ந்து மேம்படுத்தும் முயற்சியில், பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு (HEB) ஆண்டுதோறும் வழங்கிவரும் மானிய ஒதுக்கீட்டை ரிம1.5 மில்லியனில் இருந்து ரிம2 மில்லியனாக அதிகரிக்க மாநில அரசு ஒப்புக்கொண்டது. இம்மானியம் மதம், கல்வி, மருத்துவம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களுக்காக உபயோகிக்கப்படும்.

“இதனிடையே, கல்வித் திட்டத்தை பொருத்தமட்டில், மொத்தம் 2,932 தகுதியான மாணவர்கள் 2010 முதல் 2023 வரை தங்கள் மேற்படிப்பைத் தொடர ரிம4,180,367.33 உதவித்தொகையைப் பெற்றுள்ளனர்.

“எவ்வாறாயினும், இந்த முயற்சி இத்துடன் நின்றுவிடவில்லை, தமிழ்ப்பள்ளிகள் எதிர்கொள்ளும் நிலப்பிரச்சனைகளைக் கையாள்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எடுத்துக்காட்டாக, பினாங்கு மாநில அரசு ரிம29 மில்லியன் மதிப்புள்ள நிலத்தை, ஆயர் ஈத்தாமில் உள்ள ராஜாஜி தமிழ்ப்பள்ளிக்காக சமீபத்தில் வழங்கியது. அசாத் தமிழ்ப்பள்ளி, பத்து காவான் தமிழ்ப்பள்ளி, வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி மற்றும் ராஜாஜி போன்ற பிற பள்ளிகளும் மாநில அரசிடமிருந்து நில உதவியைப் பெற்றுள்ளன,” என்று தஞ்சோங் நாடாளுமன்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கொன் இயோவ் இவ்வாறு கூறினார்.

உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் இயக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜைரில் கீர் ஜோஹாரி; சமூக மேம்பாடு, சமூகநலன் மற்றும் இஸ்லாம் அல்லாத விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம்; ஆயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினர், லிம் குவான் எங்; பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர், வோங் யுயி ஹார்ங்; தஞ்சோங்கின் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி துணை அமைச்சருமான லிம் ஹுய் இங்; ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர், ஆர்.எஸ்.என் இராயர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான சாவ், மடானி தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு சிறந்த குணநலன்கள் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், கல்வியைக் கைவிடாமல் அணுகவும் வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“மாநில அரசால் திட்டமிடப்பட்ட அனைத்து முயற்சிகளும் இந்தியச் சமூகத்தின் அதிகாரத்தை அதிகரிக்க உதவும் என்று பினாங்கு மாநில அரசு நம்புகிறது. இதனால் பினாங்கை உலகை பிரசித்திபெற இது வழிவகுக்கும்,” என்று பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் வலியுறுத்தினார்.