தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தாமான் புவா பாலாவில் பாரம்பரியமிக்க பொங்கல் கொண்டாட்டம்
தமிழர்களின் பண்பாட்டுப் பெருநாளும் தமிழ்ப் புத்தாண்டுமான தைப்பொங்கலைத் தாமான் புவா பாலா மக்கள் கடந்த 19-ஆம் திகதி தங்கள் வீடமைப்புத் தளத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். பல்வேறு தடைகளையும் போராட்டங்களையும் தாண்டி பினாங்கு மக்கள் கூட்டணி அரசு பாரம்பரியமிக்க இந்தியக் கிராமமான புவா பாலா கிராம மக்களுக்கு அவர்கள் வசித்த நிலத்திலேயே அழகிய இரட்டை மாடி வீடுகளைக் கட்டி கொடுத்துச் சாதனை படைத்தது உள்ளங்கை நெல்லிக்கனியே. இன்று...