ஒரு கையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சாதனைப் படைக்க இலக்கு

ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் செர்லினா திரு சந்தன டாஸ்க்கு காசோலை வழங்கினார்.

ஸ்ரீ டெலிமா – உடல் நலம் குன்றிவராக இருந்தாலும் நாட்டின் மீது கொண்ட தேசப்பற்று காரணமாக திரு அ. சந்தன டாஸ் ஒரு கையைப் பயன்படுத்தி யமஹா ஆர்25 (Yamaha R25) ரக மோட்டார் சைக்கிளில் 6.063 கிலோ மீட்டர் வலம் வந்து மலேசிய சாதனை புத்தகம் மற்றும் கிண்ணஸ் உலக சாதனை பதிவுச் செய்வார் என எதிர்ப்பார்ப்பதாக ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் செர்லினா அப்துல் ரஷிட் தெரிவித்தார்.

இந்த ஆயுத்தப் பணியில் திரு  சந்தன டாஸ் வெற்றிப் பெற தாம் வாழ்த்துவதோடு நிதியுதவியாக  ரிம3,000 வழங்கி ஊக்கமளிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார். மேலும் திரு சந்தண டாஸ் ஸ்ரீ டெலிமா தொகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருகின்ற மலேசிய தினத்தை முன்னிட்டு தொடங்கப்படும் இந்தப் பயணம் காம்ப்ளக்ஸ் புக்கிட் ஜம்புல் , பெங்கோக், தாய்லாந்து, நய்பிய்டா, மியான்மர், சிங்கப்பூர் புக்கிட் நாவல் காம்ப்ளக்ஸ் வரை சென்று மீண்டும் தனது நேச மிக்க பினாங்கு மாநிலத்தை வந்தடைவார். இந்தப் பயணத்தில் முற்றிலும் ஒரே கையைப் பயன்படுத்தி சாதனைப் படைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உடல் நலம் குன்றிவர்களும் சாதரண மானிடர்களைப் போல் சாதனை படைக்கலாம் என்பதற்கு திரு  சந்தன டாஸ் உதாரணமாகத் திகழ்கிறார்