மாநில அரசு ஓட்டுநர்களுக்கு ‘டிரைவ் த்ரு வாயிலாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்’ அறிமுகம்.

Admin

பாகான் டாலாம் – பினாங்கு மாநில அரசு, பொருளாதாரத் திட்டமிடல் பிரிவின் மூலம், அண்மையில் வழங்கிய ஊக்கத்தொகை பெறுவதற்கான அனைத்து ஆவணங்கள் சமர்ப்பிக்க தவறிய வாடகைக்கார் ஓட்டுநர்கள் மற்றும் இ-ஹெயிலிங் ஓட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மாநில முதல்வர் சாவ் கொன் யாவ்
‘டிரைவ் த்ரு வாயிலாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு’ வருகையளித்து ஏறக்குறைய 40 ஓட்டுநர்களுக்கு பட்டர்வொர்த், அப்துல்லா அமாட் படாபி அரங்கில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சி தீவுப் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர்களுக்கு நாளை காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை கொம்தாரில் (மலாயன் வங்கி அருகாமையில்)மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு ஏற்பாட்டில் நடைபெறும்.

பெரும்பான்மை ஓட்டுநர்கள் இணைய வழி தங்களின் ஊக்கத்தொகை பெற்றுக்கொண்டனர்.

முதல்வர் அறிவித்த பினாங்கு மக்களுக்கான உதவித்திட்டத்தில் ரிம75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தத் திட்டத்தில் வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கு ரிம500 மற்றும் இ-ஹெயிலிங் ஓட்டுநர்களுக்கு ரிம300 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் வருமானத்தை இழந்து தவிக்கும் ஓட்டுநர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டது என கூறினார்.

மாநிலத்தில் உள்ள 2,252 வாடகைக்கார் ஓட்டுநர்களில், 2,045 அல்லது 90.9விழுக்காடு பேர், மின்னணு நிதி பரிமாற்றம் மூலம் இப்பணம் பெற்றதாக சாவ் கூறினார்.

8,571 இ-ஹெயிலிங்
ஓட்டுநர்களில், 8,335 அல்லது 97.25 விழுக்காட்டினர் மின்னணு பரிமாற்றத்தின் மூலமாக பணம் பெற்றனர். மொத்தத்தில், மாநில அரசு வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கு ரிம1.1 மில்லியனுக்கும், இ-ஹெயிலிங் ஓட்டுநர்களுக்கு ரிம2.5 மில்லியனுக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளது.

“இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் வரை, நமது பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது பொது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு ஆதரவு அளிப்பதற்கும் மிகுந்த சவாலாக இருக்கும்.

இந்த ஆணை நிறைவுக்குப் பின்னர், மத்திய அரசாங்கம் மற்றும் அனைவரும் சமூக-பொருளாதார மீட்சி குறித்து சிந்திக்க வேண்டும்.

“ கொரோனா கிருமி பரவுவதைத் தடுக்க
மக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
இந்த விஷயத்தில் எந்த சமரசமும் இருக்காது.

“இச்சூழல் மிகுந்த சவாலாக அமைந்தாலும் , முடிந்தவரை இக்கிருமி தொற்று விரைவாக குணமடையும் என நம்புகிறோம். இச்சூழ்நிலையை எதிர்கொள்ள நாம் அனைவரும் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

” கோவிட் -19 வழக்கு பதவில் சரிவு நிலை ஏற்படுவதற்கு ஏற்ப, மத்திய அரசு பல துறைகளுக்கு கட்ட கட்டமாக திறப்பதற்கு விலக்கு அளிக்கக்கூடும் என்று பிரதமர் டான் ஸ்ரீ முஹிதின் யாசின் தெரிவித்தார்.

“கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் நாள் அன்று, இந்த ஆணையின் மூன்றாம் கட்ட நீட்டிப்பு வருகின்ற மே மாதம் 12-ஆம் தேதி தொடரும் என அறிவித்தார் என முதல்வர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.