முனீஸ்வரர் ஆலயத்தில் தை பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் விழா

ஜாலான் பாரு முனீஸ்வரர் ஆலயம் மற்றும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு மாநில கிளை இணை ஏற்பாட்டில் ‘’தை பொங்கல் 2018” இனிதே கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.

இந்நிகழ்வில் பொங்கல் வைத்தல், கோலம் வரைதல், உறியடித்தல் ஆகிய போட்டிகள் இடம்பெற்றன. அனைத்துப் போட்டுகளிலும் முதல் மூன்று நிலையில் வெற்றிப் பெறும் பங்கேற்பாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பொது மக்களை கவரும் வகையில் கோலாட்டம் மற்றும் கும்பி ஆட்டம் இடம்பெற்றன.

ஜாலான் பாரு முனீஸ்வரர் ஆலயத் துணைத்தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன், மலேசிய இந்துதர்ம மாமன்றத் துணைத்தலைவரும் பினாங்கு கிளைத் தலைவருமான திரு நந்தகுமார், இந்து அறப்பணி வாரிய ஆணையர் திரு கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.