தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மலேசியாவில் முதல் சமயக்கல்வி மையம் உதயம் – பேராசிரியர்
மலேசியாவில் உள்ள அதிகமான ஆலயங்களில் தற்போது அர்ச்சகர்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றனர். எனவே, உள்நாட்டிலேயே அர்ச்சகர்கள உருவாக்கும் எண்ணத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மற்றும் இந்து தர்ம மாமன்றம் இணைந்து முதல் சமயக்கல்வி மையம் நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது. மலேசியாவின் முதல் சமயக்கல்வி மையம் பினாங்கில் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக பினாங்கு இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார். இந்தியாவிலிருந்து வரவழைக்கப்படும் அர்ச்சகர்களுக்கு...