பினாங்கு காற்றழுத்த பலூன் விழா

வண்ணமயமான காற்றழுத்த பலூன்

பினாங்கு காற்றழுத்த பலூன் விழா பாடாங் போலோவில் வருகின்ற 4 முதல் 5 பிப்ரவரி 2016 அன்று சீனப்பெருநாள் கொண்டாட்டத்தின் போது மூன்றாவது ஆண்டாக மற்றொரு கோணத்தில் ஜார்ஜ்டவுன் உலக பாரம்பரிய தளத்தில் நடைபெறவுள்ளது. இதன் மினி கொண்டாட்டத்தை பீச் ஸ்திரிட் இடத்தில் கடந்த 18/12/2016-ஆம் நாள் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். பினாங்கு காற்றழுத்த பலூன் விழா பினாங்கு மாநில வருகையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும்.
மாநில அரசின் ரிம900,000 செலவில் நடத்தப்படும் இவ்விழா பிரத்தியேகமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெறுகிறது.
முதல் முறையாக பெருநிலப்பகுதியான ஜாவியில் 10 காற்றழுத்த பலூன்கள் பறக்கவிடப்படும். இந்நிகழ்வு வருகின்ற பிப்ரவரி மாதம் 3-ஆம் திகதி நடைபெறும்.
15 அனைத்துலக காற்றழுத்த பலூன்களின் மூலம் அனைத்து வயோதினரும் பாடாங் போலோவில் காலை மணி 7.00 முதல் இரவு மணி 9.30 வரை பயணிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. காலை மணி 7.00-க்கு பலூன் தயார் நிலைப்படுத்தி 7.30 மணி அளவில் சுதந்திரமாக பறக்க விடுவர். யூத் பூங்காவிலிருந்து இந்த இரண்டு நாட்கள் காற்றழுத்த பலூன் பறக்கும் காட்சிகளை கண்டுகளிக்க அனைவரும் அழைக்கப்படுகின்றனர். இந்த இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கு நுழைவு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 10 பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட காற்றழுத்த பலூன்களில் வண்ண விளக்குகளுடன் கண்காட்சிக்கு வைக்கப்படும்
இதனிடையே, இந்த காற்றழுத்த பலூன் விழா கொண்டாட்டத்தில், குடும்ப நட்பு நடவடிக்கைகளான வேடிக்கை விளையாட்டுகள் இடம்பெறுகின்றன. பினாங்கு மாநிலத்தில் வெப்பக் காற்றை உள்ளடக்கிய மாபெரும் வடிவமைப்பைக் கொண்ட காற்றழுத்த பலூன்கள் பாடாங் போலோவிலிருந்து வானில் மிதந்து கொண்டு ஜொர்ச்டவுன் உலக பாரம்பரிய தளத்தை மற்றொரு கோணத்தில் காணப்படும். இப்பெரிய பலூன்களில் உலா வந்த பினாங்கு மக்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளும் வித்தியாசமான அனுபவத்தால் பரவசமடைவர் என எதிர்ப்பார்க்கபடுகிறது.