பொது மக்கள் சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கி தைப்பூச விழாவை கொண்டாட வேண்டும் – மாநில முதல்வர்

Admin

கெபுன் பூங்கா- பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் 234-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சட்டிப்பூசம் என்றழைக்கப்படும் முதல்நாள் கொண்டாட்டமான இன்று பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் மற்றும் அரசியல் தலைவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்கு வருகை மேற்கொண்டனர்.

இந்த ஆண்டு மக்களின் தாகம் மற்றும் பசியைப் போக்கும் வண்ணம் 160 தண்ணீர் பந்தல்கள் நிருவப்பட்டுள்ளன. பினாங்கு இந்து அறப்பணி வாரிய வளாகத்தில் இருந்து பினாங்கு மாநில முதல்வர் சாவ் கொன் யாவ், பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள், மாநில அரசியல் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆலய நிர்வாகத்தினருடன் அனைத்து தண்ணீர் பந்தலுக்கும் வருகை மேற்கொண்டு இந்தியர்களுக்கு தைப்பூச வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மாநில முதல்வருக்கு மேள வாத்தியங்களுடன் மாலை அணிவித்து மரியாதைச் செய்யப்பட்டது.

“பொது மக்கள் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுப்பட சுகாதார அம்சங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தற்போது சுகாதார அமைச்சிடமிருந்து அதிகமான மக்கள் ஒன்று கூடல் விழா அல்லது பண்டிகை குறித்து எவ்வித தடை உத்தரவும் கிடைக்கப்பெற வில்லை. மாநில அரசு சுகாதார அமைச்சின் உத்தரவை உடனடியாக செயல்படுத்தும், என தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ்
செய்தியாளர் சந்திப்பில்
இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரிய தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி கொரோனா வைரஸ் குறித்த பாதுகாப்பு வழங்கும் வகையில் பொது மக்களுக்காக பிரத்தியேகமாக பினாங்கு பொது மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை ஒத்துழைப்புடன் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது என விளக்கமளித்தார்.

மேலும், ஆலய நிர்வாகம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி அமைதியான சூழலில் தைப்பூசத்தை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டம் கோடிக்கனக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுப்பயணிகளை கவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, பினாங்கு அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்
தலைவர் டத்தோ சுப்பிரமணியம் அனைத்து வகையிலும் உதவிகளும் ஒத்துழைப்பும் நல்கிய பினாங்கு மாநில அரசுக்கு தனது நன்றியை நவிழ்ந்தார்.